நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட வேண்டும் !

அரசியல் நோக்கங்களுக்காக பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் எந்தவொரு முயற்சியையும் அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டின் சட்டத்தரணிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.