போதைப்பொருளுடன் இருவர் கைது!

பனாமுர, மித்தெனிய வீதியில் லேல்லவல பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் செவனகல பகுதியைச் சேர்ந்த  27 மற்றும் 36 வயதுடைய  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 190 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் குறித்து பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.