மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சிறீதரன் எம்பி சந்திப்பு

மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சனிக்கிழமை (14.03.2026) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி.ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் உடனிருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.