ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரியா பகுதியில், பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, மற்றுமொரு பஸ் மற்றும் டிராக்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், பஸ்ஸில் பயணித்த 07 பேர் உட்பட மொத்தம் 10 பேர் காயமடைந்து ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




