மிஹிந்தலையில் கொலை!

மிஹிந்தலை – மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை பதிவாகியுள்ளது.

சனிக்கிழமை 06ஆம் திகதி இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவருக்குமிடையிலான தகராறில், உயிரிழந்தவரை அவரது மனைவி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 53 வயதுடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.