முத்தையன்கட்டு குளத்தின் வால் கட்டு (Tail-end Bund) பகுதியில் தற்போது சிறிய அளவிலான திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் நீர்ப்பாசனத் திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் “முத்தையன்கட்டு குளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது” என்ற வதந்தி பரவி வருகின்றது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானதெனவும், முத்துஐயன்கட்டு குளத்துக்கு எந்தவித சேதமும் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது நடைபெற்று வருவது முத்தையன்கட்டு குளத்தின் வால்கட்டு பகுதியில் குறைந்த அளவிலான பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தவொரு அவசரமான அல்லது ஆபத்தான சூழ்நிலையும் உருவானால், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உடனடியாக தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







