சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பௌர்ணமி தினமான மே 30 ஆம் திகதி மற்றும் அதற்கு அடுத்த நாளான மே 31 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இம்முறை மே 30 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே 31 ஆம் திகதி பொது விடுமுறை தினமாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘தேசிய வெசாக் வாரம்’ ஆகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.




