ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வந்தார், நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் கபில சந்திரசேன கைது செய்யப்பட்டார்.




