கொசுத் தொல்லை தொடர்பாக புகார்கள் வந்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 ​கொசுத் தொல்லை மற்​றும் கழி​வு நீர் தேக்​கம் தொடர்​பாக புகார்​கள் வந்​தால் 48 மணி நேரத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டுமென தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தலைநக​ரான சென்​னை​யில் நாளுக்கு நாள் கொசுத்​தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக​வும், கழி​வுநீர் தேக்​கத்​துக்கு சரி​யான தீர்வு காணப்​பட​வில்லை என்​றும் குற்​றஞ்​சாட்டி கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த விஜய​ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், “சென்னை மாநகரில் பாரபட்​சமில்​லாமல் கொசுக்​களின் பெருக்​கம் அனைத்து பகு​தி​களி​லும் அதி​கரித்து வரு​கிறது. கொசுக்​கடி​யால் டெங்​கு,

மலேரி​யா, சிக்​கன் குன்யா போன்ற தொற்று நோய்​கள் வேக​மாகப் பரவி வரு​கின்​றன.

சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட விரி​வாக்​கப் பகு​தி​களில் பாதாள சாக்​கடைத் திட்​டம் இன்​னும் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட​வில்​லை. மழைநீர் வடி​கால்​களும் முறை​யாக அமைக்​கப்​பட​வில்​லை.

பெரும்​பாலான குளம், குட்​டைகள், மழைநீர் கால்​வாய்​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்டு இருந்த இடம் தெரி​யாமல் உரு​மாறி​யுள்​ளது. கழி​வுநீர் தேக்​கத்​தால் கொசு உற்​பத்​தி​யும் பன்​மடங்கு அதி​கரித்து வரு​கிறது.

எனவே கொசுத் தொல்​லையை கட்​டுப்​படுத்​தி, கழி​வுநீர் தேக்​கத்தை அகற்ற மாநக​ராட்சி அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும். அத்​துடன் காணா​மல் போன நீர்​நிலைகளை மீட்டு எடுத்து கழி​வுநீர் மேலாண்​மையை முறை​யாக செய்​ய​வும், குறிப்​பாக தெருக்​களில், சாலைகளில் கழி​வுநீர் தேங்​காத வண்​ணம் பார்த்​துக்​கொள்​ள​வும் தமிழக அரசுக்கு அறி​வுறுத்த வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது நீதிப​தி​கள், “கொசுத் தொல்லை மற்​றும் கழி​வுநீர் தேக்​கம் தொடர்​பான பிரச்​சினை​கள் சென்​னை​யில் மட்​டுமின்றி தமிழகம் முழு​வதும் உள்​ளது.

எனவே கொசு உற்​பத்​தியை கட்​டுப்​படுத்த தமிழக அரசு 4 வார காலத்​துக்​குள் விரி​வான ஆய்வு நடவடிக்​கைகளை மேற்​கொள்ள உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு உத்​தர​விட வேண்​டும். கட்​டு​மானப் பகு​தி​களில் தண்​ணீர் மற்​றும் கழி​வுநீர் தேங்​காத வண்​ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேசுகா​தார விதி​களை மீறும் நிறு​வனங்​களுக்​கும், நபர்​களுக்​கும் அபராதம் விதிக்க வேண்​டும். கொசுத் தொல்லை தொடர்​பாக புகார் அளிக்க ஏது​வாக இலவச உதவி எண்ணை அறி​முகம் செய்ய வேண்​டும்.

குறிப்​பாக இது தொடர்​பாக புகார்​கள் வந்​தால் அந்த புகார்​கள் மீது 48 மணிநேரத்​துக்​குள் உரிய நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​” என தமிழக அரசுக்​கு உத்​தர​விட்​டுள்​ளனர்​.