சமூக நீதியை நிலைநாட்ட முதல்வருக்கு மனமில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சமூக நீதியை நிலை​நாட்ட தமிழக முதல்​வருக்கு மனம் இல்லை என பாமக தலை​வர் அன்​புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

தமிழகத்​தில் 69 சதவீத இட ஒதுக்​கீட்டை பாது​காக்​க​வும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தக் கோரியும் சென்​னை​யில் பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: தமிழகத்​தில் சமூக நீதியை திமுக குழிதோண்டி புதைத்​துள்​ளது. கடந்த 36 ஆண்டு கால​மாக சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த பாமக கோரிக்கை வைத்து வரு​கிறது. ஆனால் முதல்​வர் ஸ்​டா​லின் தொடர்ந்து பொய் சொல்லி வரு​கிறார். சாதி​வாரி கணக்​கெடுப்பு என்​பது சமூக நீதி பிரச்​சினை. ஒடுக்​கப்​பட்ட சாதி​களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற நோக்​கில் தான் அந்த சாதி​கள் என்ன நிலை​யில் இருக்​கிறார்​கள் என்​பதை அறிந்​து​கொள்​ளத்​தான் கணக்​கெடுப்பு நடத்​தக் கோரு​கிறோம். இது தெரிந்​தால் தான் சமூகநீ​தியை நிலைநாட்ட முடி​யும்.

கடந்த 5 ஆண்​டு​களில் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த போராட்​டம், அறிக்​கை, தீர்மானம், முதல்​வருடன் சந்​திப்பு என 35 முறை பாமக வலி​யுறுத்​தி​யுள்​ளது. தமிழகம் 50 ஆண்​டு​களில் முன்னேறும் என்​றால் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தி​னால் 20 ஆண்​டு​களில் அந்த நிலையை எட்​டி​விடும். அனைத்து சமூகங்களும் முன்​னேறினால்தான் நிலை​யான வளர்ச்சி இருக்கும்.

தமிழகத்​தில் உள்ள கால்​நடைகள், தெரு​நாய்​கள் என அனைத்​துக்​கும் கணக்கு வைத்​துள்​ளார்​கள். ஆனால் தமிழர்​களின் கல்​வி, வேலை​வாய்ப்​பு, சுயமரி​யாதை வாழ்​கைக்​காக கணக்​கெடுப்பு நடத்த மறுக்​கிறார்​கள். திமுக அரசிடம் அதி​காரி​கள், நிதி என அனைத்​தும் உள்ளது ஆனால் சமூக நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்ற மனம் முதல்​வருக்கு இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதி​முக, தவெக புறக்​கணிப்பு: இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்க பல்​வேறு கட்​சிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது.அதே​போல அதி​முக, தவெக​வுக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டது.

பெரும்​பாலான கட்​சிப் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்ற நிலை​யில் அதி​முக, தவெக​வில் இருந்து யாரும் வரவில்​லை. அதே​நேரம் பாஜக மாநில துணை தலை​வர் கரு.​நாக​ராஜன், அமமுக துணை பொதுச்​செய​லா​ளர் செந்​தமிழன், புரட்சி பாரதம் கட்சி தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்​தி, தமாகா துணை தலை​வர் இ.எஸ்​.எஸ்​.​ராமன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்​கிணைப்​பாளர் களஞ்​சி​யம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலை​வர் பொற்கொடி ஆம்​ஸ்ட்​ராங் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்​.