சி.​வி.சண்முகத்துக்காக தொகுதியை விட்டுக் கொடுக்கும் சிவகுமார்

கடந்த முறை விழுப்​புரத்​தில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போன அதிமுக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், இம்​முறை தனது சொந்த ஊரை உள்​ளடக்​கிய மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட திட்ட​மிட்டு வரு​கி​றார்.

இதற்​காக அவர் கடந்த 3 ஆண்​டு​களாக மயிலத்​தில் மையம் கொண்டுள்ள நிலை​யில், அதை மெய்​பிக்​கும் வித​மாக, அவரது அண்​ணன் ராதாகிருஷ்ணன், மயிலத்​தில் போட்​டி​யிட சண்​முகத்துக்​காக விருப்ப மனு கொடுத்​திருக்​கி​றார்.

மயிலம் தொகுதி தற்​போது பாமக வசம் உள்​ளது. அன்​புமணி​யின் விசு​வாசி​யான சிவகு​மார் தான் இப்​போது அங்கு எம்​எல்ஏ. இந்​தத் தேர்​தலில் அன்​புமணி எப்​படி​யும் அதி​முக அணி​யில் தான் இடம்​பிடிப்​பார்.

இதனால், சண்​முகம் தொகுதி மாறுகி​றார் என்று தெரிந்​ததுமே சிவகு​மாரும் தனக்​கான தொகு​தியை தயார்​படுத்த ஆரம்​பித்​துவிட்டார். அந்த விதத்​தில் இம்​முறை அவர் மயிலத்தை விட்டு விக்​கிர​வாண்​டிக்கு இடப்​பெயர்ச்சி ஆகி​றார்.

கடந்த ஓராண்​டாகவே விக்​கிர​வாண்​டியை வட்​ட​மிடும் சிவகு​மார், ‘பசுமை தாயகம்’ அமைப்​பின் தலை​வர் சவுமியா அன்​புமணி​யின் ‘மகளிர் உரிமை மீட்​புப் பயண’ பொதுக் கூட்​டத்தை விக்​கிர​வாண்டி தொகு​தி​யில் விமர்​சை​யாக நடத்தி முடித்​துள்​ளார்.

அப்​போது பேசிய சவுமியா அன்​புமணி, ‘‘இடைத்​தேர்​தல் என்​றால் ஆளுங்​கட்​சி​யின் ஆதிக்​கம் இருக்​கும். எதிர்க்​கட்​சிகள் டெபாசிட் இழந்​து​விடும். ஆனால், விக்​கிர​வாண்டி இடைத்​தேர்​தலில் பாமக 59 ஆயிரம் வாக்​கு​களைப் பெற்று வரலாற்​றுச் சாதனை படைத்​தது’’ என்று விக்​கிர​வாண்​டி​யில் தங்​களின் வெயிட்டை கோடிட்​டுக் காட்டி​னார்.

இந்த நிலை​யில், விக்​கிர​வாண்​டிக்கு மாறப் போகிறீர்​களா என்று சிவகு​மாரிடம் கேட்​டதற்​கு, “விக்​கிர​வாண்டி தொகு​திக்கு உட்​பட்ட சிந்​தாமணி கிரா​மம்​தான் எனது பூர்வி​கம். அதனால் விக்​கிர​வாண்டி தொகு​தி​யில் போட்​டி​யிட தலைமை வாய்ப்​பளித்​தால் போட்டியிடத் தயா​ராக இருக்​கிறேன்” என்​றார்.