தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனை செய்யப்பட்ட மருந்துகளில் 43 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்கின்றன.
மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் இருந்தும் சில மருந்துகள் எடுத்து பரிசோதனை செய்யப்படுகின்றன.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 215 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில் தமிழகத்திலிருந்து மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்றிருந்தன. அதில் சென்னை ஆய்வகத்தில் 22 மருந்துகள், மதுரை ஆய்வகத்தில் 21 மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அதேபோல், கர்நாடகத்தில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகள் இருந்தன.
தெலங்கானா, கேரளம், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், இமாச லப்பிரதேசம் மாநிலத்திலும் தரக்குறைபாடுள்ள மருந்துகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒரு குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பு (பேட்ச்) மருந்துகள் தரப்பரிசோதனை
யில் தோல்வியடைவது, அந்தத் தொகுப்புக்கு மட்டுமே பொருந்தும். சந்தையில் உள்ள மற்ற மருந்துகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தனர்.





