நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்​தில் 2026-ம் ஆண்​டுக்​கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி​களை கண்​காணிக்க தேர்​தல் ஆணை​யம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களை நியமித்​துள்​ளது.

இவர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடைபெற்றது.

இக்​கூட்​டத்​தின்​போது. திருத்​தக் காலம் முழு​வதும் வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களின் பங்​கு, பொறுப்​பு​கள் மற்​றும் கடமை​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் அதி​காரி விரி​வாக விளக்​கி​னார்.

திருத்​தப் பணி​கள் துல்​லிய​மாக​வும் சீராக​வும் நடை​பெறும் வகை​யில் அவற்றை தொடர்ச்​சி​யாக கண்​காணித்​து, மாவட்ட அதி​காரி​களுக்கு தேவை​யான வழி​காட்​டு​தலை வழங்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தி​னார்.

எஸ்ஐஆர் பணி காலத்​தில், இப்​பணி​யின் முன்​னேற்​றத்தை மதிப்​பாய்வு செய்​ய​வும். சிக்​கல்​களுக்கு தீர்வு காண​வும். தேர்​தல் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தல்​களைப் பின்​பற்​று​வதை உறுதி செய்​ய​வும்.

தங்​கள் பொறுப்​பில் உள்ள ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் குறைந்​தது 3 முறை பார்​வை​யிட வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தி​னார். தலைமை தேர்​தல் அதி​காரி அலு​வல​கம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.