பாடம் நடத்துவதை நிறுத்திய அரசு மருத்துவர்கள் – தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்

தமிழகம் முழு​வதும் போராட்​டத்தை தீவிரப்படுத்தியுள்ள அரசு மருத்​து​வர்​கள், மருத்​து​வக் கல்லூரிகளில் மாணவர்​களுக்கு வகுப்பு எடுப்​பதை நிறுத்தியுள்ளனர்.

‘முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்​டு ​வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்​து, அரசு மருத்​து​வர்​களுக்​கான திருத்​தப்​பட்ட ஊதி​யம், 20 ஆண்​டு​கள் கடந்த மூத்த முது​நிலை மருத்துவர்களுக்கு ஊக்​கத்​தொகை, ஆரம்ப சுகா​தார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3,000 வழங்​கு​வது, நோயாளி​களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்​துவ பணி​யிடங்​களை உருவாக்கு​வது’ என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலியுறுத்தி பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

இதற்​காக, பல்​வேறு சங்​கங்​கள் ஒருங்​கிணைந்​து, அனைத்து அரசு மருத்​து​வர்​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பை உரு​வாக்​கி, சுகாதாரத் துறை அமைச்​சர், செயலருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்​தி​யும் தீர்வு கிடைக்கவில்​லை. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் 20 ஆயிரம் மருத்​து​வர்​கள் கடந்த 12-ம் தேதி முதல் கோரிக்​கைகள் அடங்​கிய அட்டை அணிந்து பணி​யாற்​றினர்.

அடுத்த கட்​ட​மாக 48 மணி நேர உண்​ணா​விரதப் போராட்​டத்​தி​லும் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில், அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் மாணவர்​களுக்கு வகுப்பு எடுப்​பதை அரசு மருத்​து​வர்​கள் தற்​போது நிறுத்​தி​யுள்​ளனர்.