மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் புகழஞ்சலி

அன்​றும் இன்​றும் என்​றும் தமிழகத்​தில் இந்​திக்கு இடமில்லை என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழக அரசின் சார்​பில் மொழிப்போர் தியாகி​கள் தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்னை மூலக்​கொத்​தளத்​தில் அமைந்​துள்ள தியாகி​கள் தாள​முத்​து, நடராசன் நினை​விடத்​தில் வணக்​கம் செலுத்​தி​னார்.

மேலும், அங்​குள்ள சமூகப் போராளி எஸ்​.தரு​மாம்​பாள் நினை​விடத்​தி​லும் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். இதைத்​தொடர்ந்​து, எழும்​பூரில் தாள​முத்து – நடராசன் மாளிகை வளாகத்​தில் நிறு​வப்​பட்​டுள்ள தாள​முத்​து, நடராசன் ஆகியோரின் சிலைகளை திறந்​து​வைத்​து, புகைப்​படக் காட்​சிகளை பார்​வை​யிட்​டார்.

இந்​நிகழ்ச்​சிகளில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள், எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​கள், அரசு உயர​தி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். கிண்டி காந்தி மண்டப வளாகத்​தில் உள்ள மொழிப்போர் தியாகி​கள் மணிமண்​டபத்​தில் தாள​முத்​து -நடராசன் உள்​ளிட்​டோரின் படங்​களுக்கு அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், மா.சுப்​பிரமணி​யன் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர்.

மொழிப்போர் தியாகி​கள் தினத்​தையொட்டி முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் சமூகவலைத்​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் ஸ்டா​லின்: மொழியை உயி​ராய் நேசிக்​கும் ஒரு மாநிலம், இந்​தித் திணிப்​புக்கு எதி​ராக ஒன்று திரண்டு போராடியது. இந்​தி​யத் துணைக் கண்​டத்​தி​லுள்ள பல்​வேறு மொழி​வழி தேசிய இனங்​களின் உரிமை​யை​யும் அடை​யாளத்​தை​யும் காத்​தது.

தமிழுக்​காகத் தங்​கள் இன்​னு​யிரையே ஈந்த அந்​தத் தியாகி​களை நன்​றியோடு வணங்கு​கிறேன். நம் தமிழுணர்​வு சாகாது; இந்​தித் திணிப்பை என்​றும் எதிர்ப்போம்.