“ஆப்​பிரிக்​கர்​கள் அருவருப்பானவர்கள்” – ட்ரம்ப்

ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள் என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை கிளப்​பி​யுள்​ளது.

பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் ட்ரம்ப் கூறியதாவது: ”சோ​மாலி​யாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்​தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவை​யில்​லை.

அதற்கு பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்​களுக்கு ஆட்​சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்​களுக்கு அனுப்புங்கள்.

சோ​மாலியா பேரழிவை ஏற்​படுத்​தும் இடம். சோ​மாலியர்​கள் குற்றச்​செயல்​களில் ஈடு​படு​பவர்​கள். அவர்​கள் கப்​பலை பின்​தொடர்வதில் மட்​டுமே சிறந்​தவர்​கள். இவ்​வாறு ட்ம்ப் கூறி​னார்.

அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பொறுப்​பேற்​ற பிறகு சட்ட விரோதமாக குடியேறிவர்​கள் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். குடியேற்ற எதிர்ப்பு கொள்​கைக்கு அமெரிக்​கர்​களிடம் ஆதரவு திரட்​டும் வித​மாக அவ்​வப்​போது ட்ரம்ப் இது​போன்ற சர்ச்​சை​யான கருத்​துகளை தெரிவித்து வரு​கிறார்.

அதன் ஒரு பகு​தி​யாக தற்போது ஜனநாயக கட்​சி​யைச் சேர்ந்த இல்​ஹான் ஒமர் மீது இன ரீதி​யாக ட்ரம்ப் கடுமை​யான விமர்சனத்தை முன்​வைத்​தார். இல்​ஹான் ஒமர் சோ​மாலி​யாவைச் சேர்ந்த முஸ்​லிம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.