இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்

ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான ‘IRIS Lavan’ இந்திய அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, கப்பலில் உள்ள 183 பணியாளர்களுக்கு கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளில் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் இந்திய அதிகாரிகளிடமிருந்து இந்த அவசர அனுமதியைக் கோரியது, மார்ச் 1 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.