இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை!

ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதனால், இரு தரப்​புக்​கும் இடையே இடைக்​கால போர் நிறுத்​தம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த போர் நிறுத்​தத்​துக்கு இந்​தி​யா, உள்​ளிட்ட பல்​வேறு நாடு​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​திவரும் நிலை​யில், தனது கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் உலகின் முக்கிய ஜலசந்​தி​யான ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி​வைத்​துள்​ளது.

இதனால் வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்ணெய் கப்​பல்​கள் உலகின் பிற நாடு​களுக்கு செல்வதில் பெரும் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. கச்சா எண்ணெய் சர்​வ​தேச சந்​தைக்கு வரு​வ​தில் சிக்​கல் ஏற்பட்டுள்​ள​தால் அதன் விலை கடுமை​யாக உயர்ந்துள்ளது. இதன் விளை​வாக பல்​வேறு நாடு​கள் சமையல் எரி​வாயு தட்​டுப்​பாடு, பெட்​ரோல், டீசல் விலை உயர்வு உள்​ளிட்ட பாதிப்​பு​களை எதிர்​கொண்​டுள்​ளன.

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அனைத்து கப்​பல் போக்​கு​வரத்​துக்​காக ஹார்​முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்​கெடு விதித்​தார். இந்​தக் காலக்​கெடு நேற்று அதி​காலை 5.30 மணி​யோடு நிறைவடைய இருந்​தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்​கெடுவை 2 வாரங்​களுக்கு நீட்​டிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டு​கோள் விடுத்​தார்.

அதன்​படி, ஈரான் மீதான தாக்​குதலை 2 வார காலத்​துக்கு நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஒப்​புதல் அளித்​தார். மேலும் இது ஒரு போர் நிறுத்​தம் என்​றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து போர் நிறுத்​தம் செய்யப்படும் இந்த 2 வாரங்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்தியை திறக்​க​வும் ஈரான் சம்​ம​தித்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து இடைக்​கால போர் நிறுத்​தம் செய்ய உதவியதற்​காக பாகிஸ்​தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலை​யில், நிரந்தர போர் நிறுத்​தத்​துக்​காக ஏப்​ரல் 10-ம் தேதி இஸ்​லா​மா​பாத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்த பாகிஸ்​தான் ஏற்​பாடு செய்​துள்​ளது. இந்த போரில் பாகிஸ்​தான் வெளிப்​படை​யான மத்தியஸ்தராக அறியப்​பட்​டாலும் பின்​னணி​யில் சீனாவின் பங்கு இருப்​பதும் தெரிய​வந்​துள்​ளது.