இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உயர் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு, தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி அச்சுறுத்தியுள்ளார்.
“சரியான நேரத்திலும் இடத்திலும், குற்றமிழைக்கும் அமெரிக்காவிற்கும் இரத்தவெறி கொண்ட சியோனிச ஆட்சிக்கும் தீர்க்கமான, வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று ஹடாமி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
லாரிஜானி மற்றும் பிற ‘தியாகிகளின்’ மரணங்களுக்குப் பழிவாங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தனித்து இயங்கும் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, லாரிஜானியின் மரணத்திற்கு ‘பழிவாங்கும் விதமாக’ மத்திய இஸ்ரேல் மீது ஏற்கனவே ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





