சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வினோதமான கோரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
உகாண்டா இராணுவத் தளபதி முஹூசி கைனருகபா, துருக்கி நாடு தமக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரும், அந்த நாட்டிலேயே மிகவும் அழகான பெண்ணையும் திருமணம் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஹூசி கைனருகபா, உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் மகனாக இருப்பதுடன், எதிர்கால ஜனாதிபதியாகவும் கருதப்படுகிறார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சோமாலியாவில் உகாண்டா இராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், துருக்கி பொருளாதார பலன்களைப் பெறுகிறது. இதற்கான இழப்பீடாகவே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
30 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், துருக்கியுடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், துருக்கி ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு உகாண்டா வான்வெளியில் தடை விதிக்கப்படலாம் என்றும், கம்பாலாவில் உள்ள துருக்கிய தூதரகம் மூடப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது முதல் முறையல்ல. 2022ஆம் ஆண்டு, இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியை திருமணம் செய்ய 100 மாடுகளை வழங்க முன்வந்ததோடு, மறுத்தால் ரோம் நகரை கைப்பற்றுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வினோதமான கோரிக்கை தற்போது சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



