சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென பரவி 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது.
இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.கடந்த ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.





