மலேசியாவில் “இரத்மலானை சைமா” உட்பட மூவர் கைது!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘இரத்மலானை சைமா’ என்றழைக்கப்படும் சந்தேகநபர் உட்பட  மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலானை சைமா திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘கஞ்சபானை இம்ரான்’ என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.