ரஷ்யாவால் அச்சுறுத்தல்… நாடொன்றின் எல்லையை வலுப்படுத்த படைகளை அனுப்பும் ஜேர்மனி

நாட்டின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு உதவுவதற்காக போலந்துக்கு ஒரு படையினரை அனுப்பப்போவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

வலுப்படுத்தும் திட்டம்

ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்த நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலேயே ஜேர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது.

 

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான போலந்து, கடந்த ஆண்டு மே மாதம் பெலாரஸ் மற்றும் ரஷ்ய கலினின்கிராட் பகுதியை உள்ளடக்கிய அதன் எல்லையின் நீண்ட பகுதியை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது.

இந்த நிலையில், போலந்தில் ஜேர்மன் வீரர்களின் முக்கிய பணி பொறியியல் நடவடிக்கைகளாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதில் கோட்டைகளை கட்டுதல், அகழிகள் தோண்டுதல், முள்வேலி அமைத்தல் அல்லது டாங்கிகளுக்கானத் தடைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்.

ஆனால் ஜேர்மன் வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் ஏதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஜேர்மன் வீரர்கள் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து 2027 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்தத் திட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவால் அச்சுறுத்தல்... நாடொன்றின் எல்லையை வலுப்படுத்த படைகளை அனுப்பும் ஜேர்மனி | Send Soldiers To Poland Border

மேலும், இராணுவ மோதல்களால் வீரர்களுக்கு உடனடி ஆபத்து இல்லாததால், இந்தப் பணியமர்த்தலுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. சில விதிவிலக்கான நிகழ்வுகளைத் தவிர, ஜேர்மன் நாடாளுமன்றம் நாட்டின் ஆயுதப் படைகளை வெளிநாடுகளில் நிலைநிறுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து, வார்சா கியேவை உறுதியாக ஆதரித்து வருகிறது. மேலும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களுக்கான போக்குவரத்து பாதையாகவும் இருந்து வருகிறது.

ரஷ்யாவால் அச்சுறுத்தல்... நாடொன்றின் எல்லையை வலுப்படுத்த படைகளை அனுப்பும் ஜேர்மனி | Send Soldiers To Poland Border

 

அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடு ஜேர்மனி, மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகள் முதல் கவச வாகனங்கள் வரை ஏராளமான உபகரணங்களை கியேவுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.