வங்கதேச நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத் தேர்தல்

வங்​கதேச நாட்​டில் இன்று பொதுத் தேர்​தல் நடைபெறவுள்​ளது.

வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்​டத்​தால் பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீனா நாட்​டை​விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்தார். அங்கு அவரது ஆட்சி கவிழ்க்​கப்​பட்​டதை அடுத்து முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைக்கப்பட்டது.

இதனிடையே அங்கு பிப்​​.12ம் தேதி (இன்​று) நாடாளுமன்ற பொதுத்​தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி வங்கதேசத்​தில் இன்று பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. மேலும், அரசின் நிர்​வாக அதி​காரங்​களைக் கட்​டுப்​படுத்​தும் ‘ஜூலை சாசனம்’ என்ற சீர்​திருத்​தத் தொகுப்பு தொடர்​பான பொது வாக்​கெடுப்​பும் நடை​பெறவுள்​ளது.

இதனால் நாடு முழு​வதும் அனைத்து வாக்​குச்​சாவடிகளில் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. தேர்​தலுக்​காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டுள்​ளன. இதில் 50% பதற்றமானவை என அடையாளம் காணப்பட் டுள்ளது. வாக்குப் பதிவு இன்று மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்​ பின்​னர் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்​கும்.