விண்வெளிப் போர்களுக்கு தயாராகும் ஜேர்மனி – புதிய பாதுகாப்பு திட்டம்

ஜேர்மனி தனது முதல் தேசிய விண்வெளி பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அமைச்சரவை, வலுவான மற்றும் தடுக்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.

விண்வெளியில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசாங்கத்தின் பொறுப்பான நடத்தையை ஊக்குவிப்பதி இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயற்கைக்கோள் வலையமைப்புகளை விரிவுபடுத்துவதையும், கூட்டுப் பணிகளை மேற்கொள்வதையும் வலியுறுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஜேர்மனி, 2030-க்குள் விண்வெளி திட்டங்களுக்கு 35 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.