ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியதாகக் கூறப்படுவர் அமெரிக்காவில் கைது

இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தல் குறித்த விசாரணைகளுக்காக அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

ஒக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படையில் மஹ்மூத் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது.

அமெரிக்க விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிரந்தரக் குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் பொய்கூறி விசா பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார்.

விசா மோசடி மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற பெயரிலும், அதே வயதிலும் மற்றொரு நபர் இருப்பதாகவும், அவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.