போக்குவரத்து அமைச்சு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லங்கா PAY மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை இணைந்து, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான அபராதங்களை இணையவழியில் செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, குறித்த ஊடக சந்திப்பு நாளை திங்கட்கிழமை(20), காலை 10.00 மணிக்கு, நாரஹேன்பிட்டவிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.