வடக்கு மாகாண ஆளுநரின் வாராந்தப் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறாது!

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பொதுமக்களை நேரில் சந்திக்கும் வாராந்தப் பொதுமக்கள் தினம் எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) இடம்பெறாதெனவும், அதற்கு அடுத்த வாரத் திங்கட்கிழமை (22.12.2025) வழமை போன்று யாழ் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறுமனெவும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு தமது வருகையைத் திட்டமிடுமாறும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினர் கேட்டுள்ளனர்.