தெற்கு ஜேர்மனியிலுள்ள மக்களுக்கு உறைந்த நீர்நிலைகள் தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Constance ஏரி கடும் குளிரால் உறைந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். மூன்று பேர் உறைந்த ஏரியின் மீது நடக்க முயன்ற நிலையில், பனி உடைந்து அவர்கள் மூவரும் ஏரிக்குள் விழுந்துள்ளார்கள்.
குளிரால் ஏற்படும் ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு பின்னர் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, உறைந்த ஏரியின் மீது நடக்க முயற்சிக்கவேண்டாம் என பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.





