அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து விளக்கமளிக்க நான் தயார்

அரசாங்கம் நாட்டை அழிக்கிறது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து விளக்கமளிக்க நான் தயாராக உள்ளேன் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹங்குணவெவே தம்மரதன தேரர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்