கிரிபத்கொடையில் சுமார் 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு குறித்த விபரங்கள் வருமாறு,
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதிப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இடை மறிக்கப்பட்டது.





