தனது சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான அனுர பண்டாரநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றுடன் உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதில், அனுர உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு 77 வயது இருக்கும். அனுரவின் ஆத்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு 1949.02.15 அன்று பிறந்த மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.






