ஈரானின் உயர் தலைவர் உயிரிழப்பு : 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்

ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் ஈரானின் உயர் தலைவரின் மறைவை முன்னிட்டு அந்நாட்டில் ஒரு வாரத்துக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய பாரிய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக ஈரானின் ஃபோர்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டது.

மேலும், ஈரானின் உயர் தலைவர் உயிரிழந்த தகவலை அந்நாட்டு அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதிப்படுத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களில் அந்நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.