இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்

இஸ்ரேலில் பணிபுரியும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் வியாழக்கிழமை (06) விசேட தொலைபேசி உரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலை இராஜதந்திர ரீதியில் கையாண்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.