வெளிவந்த க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்று வந்த நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சோந்த யூட்நிமால் தம்பதிகளின் புதல்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுஸ்ராம் பரீட்சையில் 3A சித்திகளை பெற்று விஞ்ஞான பாடத்தில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.





