நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசிற்குச் சொந்தமான நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்திற்கு அனுமதியளித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





