வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) சித்திராப் பௌர்ணமி விரத உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
சிறப்புப் பூஜை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் தேவி சமேதரராக அடியவர்கள் புடைசூழ உள்வீதி உலா வந்தார்.






