ஈச்சிலம்பற்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அவ்வேளை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.