சமூக வலைதளங்களில் பழி தூற்றும் திமுக: வைகோ விமர்சனம்

சமூக வலை​தளங்​களில் திமுக​வினர் காரணமில்​லாமல் மதி​முக மீது பழிதூற்​று​வ​தாக அக்​கட்சி பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்​தில் நீதி​மன்ற உத்​தர​வின்​படி விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே மேட்​டமலை​யில் சீமை கரு​வேலை மரங்​களை அகற்​றும் பணி நேற்று தொடங்​கியது. இந்​நிகழ்ச்​சி​யை, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தலைமை வகித்து தொடங்​கி​வைத்​தார்.

அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் நமக்கு கேடு விளை​விப்​பது கர்​நாடக அரசு அல்ல, மத்​திய அரசு​தான். 2014-ம் ஆண்​டில் கர்​நாடக மாநிலத்​தைச்சேர்ந்த அனைத்து கட்​சிகளின் கூட்​டம், அப்போதைய மத்திய அமைச்​சர ஆனந்த குமார் வீட்​டில் 2 நாட்​கள் நடந்​தது. அதில், சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் ஜவடேகரும் கலந்​து​கொண்​டார்.

அப்​போது, மேகே​தாட்டு அணை கட்​டி​னால் தஞ்சை மாவட்​டத்​தில் பஞ்​சம் ஏற்​படும் எனக் கூறி, அப்​போதே நான் எதிர்த்​தேன். ஒருமாத கால தவெக ஆட்சி அரு​மையாக உள்​ளது.

பெண்களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்கள் காலம்​கால​மாக எல்லா ஆட்​சிகளி​லும் நடை​பெற்று வரு​கிறது. இது​போன்ற சம்​பவங்​களில் ஈடு​படு​பவர்​கள் வாழ்​நாள் முழு​வதும் சிறை​யில் இருக்​கும்​படி​யான சட்​டத்தை கொண்​டுவர வேண்​டும்.

கூட்​டணி குறித்து நாங்​கள் இன்​னும் யோசிக்​கவே இல்​லை. பொதுக்​குழுவை கூட்ட வேண்​டும். மிக​வும் விசு​வாச​மாக இருந்து திமுக​வினரை வெற்​றி​ பெறச் செய்​துள்​ளோம். கூட்​ட​ணி​யில் உள்ள மற்​றவர்​கள் முடி​வெடுத்து ஆளும் ஆட்​சி​யில் சேர்ந்​துள்​ளார்​கள். நாங்​கள் எந்த முடி​வும் எடுக்​க​வில்​லை. சமூக வலை​தளங்​களில் திமுக​வினர் எங்​களை காரணமில்​லாமல் பழி தூற்​றும் செயலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். நாங்​கள் அதைப் பற்றி கவலைப்​பட​வில்​லை. வரும் 27-ம் தேதி பொதுக்​குழு​வில் ஆலோ​சித்து எங்​களது நிலைப்​பாட்டை அறி​விப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.