உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை தொடர்பில், தன்னை எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தர தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) புதன்கிழமை நிறைவு செய்தது.
இவ்வேளையில் மனுதாரரைக் கைது செய்யும் தீர்மானம் இல்லையெனச் சட்ட மாஅதிபர் நீதிமன்றில் உறுதியளித்ததை அடுத்து, நீதிபதிகளான சசி மஹேந்திரன், ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்தனர். அத்துடன், இவரின் இடமாற்றம் குறித்த பரிந்துரைகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.





