ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி: பின்னணி

ஜேர்மன் நகரமொன்றில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்திவருகிறார்கள்.ஜேர்மனியின் Thuringia மாகாணத்திலுள்ள Erfurt நகரில், சுமார் 15,000 பேர் திரண்டு பேரணி நடத்திவருகிறார்கள்.

ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி: பின்னணி | Housands Protest Against Germany Far Right Afd

இந்தப் பேரணி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட, தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு எதிரானது.

Erfurt நகரில், AfD கட்சி, இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது. ஆகவே, மாநாடு நடக்கும் கட்டிடத்துக்குச் செல்லும் வழிகளை அடைத்தபடி பொதுமக்களும், யூனியன்களும், சமூக ஆர்வலர்களும், இடதுசாரிக் கட்சிகளும் திரண்டு பேரணி நடத்திவருகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவரத் தடுப்பு பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் ஆளும் பிரெட்ரிக் மெர்ஸின் CDU/CSU கூட்டணியை விட AfD கட்சிக்கு ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டில் AfD கட்சி வெற்றியும் பெற்றுள்ளது.

ஆக, இந்த விடயங்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியை வெற்றிக்கு வழிநடத்திவிடுமோ என்னும் பயம் ஒரு தரப்பினருக்கு உள்ளது என்பதால், அவ்வப்போது மக்கள் திரண்டு அக்கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.