யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் வியாழக்கிழமை (02.07.2026) நடந்த விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாயொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் என ஐவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார்ச் சைக்கிள்கள் ஒன்றையொன்று மோதியே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது. மருதங்கேணிப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







