காதலியுடன் முரண்பாடு ; உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து வந்த இளைஞனே நேற்று புதன்கிழமை (24) இந்த அவசர முடிவை எடுத்துள்ளார்.

காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து தொடர்பு கொண்ட நிலையில் தனது உயிரை விட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் மற்றும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக இலவசமாக சேவை செய்ய அமைப்புகள் உள்ளன.

தேசிய மனநல உதவி எண் 1926
சுமித்ரயோ : +94 11 2 682535/+94 11 2 682570
சிசிசிலைன் அமைப்பு : 1333 

சமீபத்திய செய்திகள்