யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.
எனவே, இந்த ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

யாழில் நேர அட்டவணைக்கேற்ப, 38 புதிய பஸ்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் வீதிக்கு 23 பேருந்துகளும் பருத்தித்துறை வீதிக்கு 10 பேருந்துகளும் காரைநகர் வீதிக்கு 5 பேருந்துகளும் தேவையாக உள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன.
யாழில் 6 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே, வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞை விளக்குகளை அமைக்க வேண்டும் என்றார்.






