முருகப்பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்றான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (11.02.2025) பிற்பகல்-02.30 மணியளவில் தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலயத்தின் தலைவாசல் கோபுர முன்றலில் பால்குடப் பவனி ஆரம்பமாகி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் நோக்கி நடைபெறவுள்ளது.
குறித்த பால்குடப் பவனியில் அடியவர்களுக்குத் தேவையேற்படின் இலவச வசதிகள் செய்து தரப்படுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





