பல்வேறு குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஒன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அமைக்கவுள்ளது.
இந்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளாராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும், பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவவும் செயற்படவுள்ளனர்.



