யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வன்முறை குழு ஒன்று தீயிட்டு எரித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, வன்முறை கும்பல் தீயிட்டு எரித்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





