ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகஸ்வெவ பிரதேசத்தில் நான்கு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திறிகிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 34, 38 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




