சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் இலக்கை அடையலாம்!

சிறிலங்கா ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மாத்திரம் வீதியைத் துப்புரவு செய்வதால் நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் இலக்கை அடைய முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் சிறந்தது. அரசியல் நோக்கத்துக்கு இந்த திட்டத்தைச் செயற்படுத்தக் கூடாது.  நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியிலிருந்து புதிய மாற்றங்கள் தோற்றம் பெற வேண்டும். சிங்கப்பூர் நாட்டில் க்ளீன் செயற்திட்டம் ஆரம்பமான போது அரசாங்கத்துக்கு அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

கொழும்பு பொது நூலகத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.