நல்லூரிலிருந்து காலிச் சிவன் ஆலயம் நோக்கித் தரிசன யாத்திரை

இலங்கை முதல் உதவிச் சங்க  இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலிச் சிவன் ஆலயம் வரை மேற்கொள்ளப்படும் புனித திருத்தலத் தரிசன யாத்திரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07.02.2025) காலை-06.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்  கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் தரிசன யாத்திரை பிரதான வீதி ஓரமாக அமைந்துள்ள பல்வேறு ஆலயங்களைத் தரிசித்தவாறு காலிச் சிவன் ஆலயத்தைச் சென்றடைந்து அங்கு திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெறும்.